search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வந்தவாசி தகராறு"

    வந்தவாசி அருகே தொழிலாளியிடம் தகராறு செய்து தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த புன்னை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (34) கூலித்தொழிலாளி.

    இவர் ஓசூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு அதே கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த நெல்லியாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (22) பாஸ்கர் (26) ஜானகிராமன் (26) ஆகிய மூவரும் தூங்கி கொண்டிருந்த ஏழுமலையிடம் தகராறு செய்து கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஏழுமலை கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப் பதிவு செய்து சுரேஷ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்.
    வந்தவாசி அருகே சாப்பாட்டு விருந்தில் கூட்டு, பொறியல் வைக்காததால் திருமண விழாவில் ஏற்பட்ட தகராறில் 5 பேரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக சென்னை பிரியாணி மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மேல்நெமிலி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் வந்தவாசி டவுன் ஆரணி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடந்தது.

    நேற்று இரவு வரவேற்பு விழா நடந்தது. அப்போது உறவினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. நள்ளிரவு 1 மணி அளவில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த மணப்பெண்னின் தந்தை ஆறுமுகத்தின் நண்பரான சீனிவாசன் (45) (பிரியாணி மாஸ்டர்) இவரது மனைவி பிரேமா (40) இருவரும் பைக்கில் வந்தனர்.

    சீனிவாசன் தம்பதிக்கு உணவு பரிமாறப்பட்டது. மணமகனின் உறவினரான பச்சையப்பன் (35) என்பவர் பரிமாறியுள்ளார். கூட்டு, பொறியல் சீனிவாசனுக்கு வைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஏன் கூட்டு பொறியல் இல்லை என சீனிவாசன் கேட்டுள்ளார். நள்ளிரவு 1 மணி ஆவதால் கூட்டு பொறியல் இல்லை என கூறியுள்ளார்.

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பச்சையப்பனை சீனிவாசன் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த பச்சையப்பன் உறவினர்கள் சீனிவாசனை தாக்கினர்.

    இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பச்சையப்பன் அவரது உறவினர்கள் முனுசாமி (44), ஆகாஷ்(20), சேகர்(51), ராஜா ( 50) ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில் 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக முனுசாமி சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சீனிவாசனுக்கும் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிச்சையில் இருந்தார்.

    இன்று காலை மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட முயன்ற சீனிவாசனை கோட்டைமூலை பகுதியில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தில் மகள் கண்ணெதிரே தந்தையை கத்தியால் வெட்டிய கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 52) தனியார் கம்பெனியில் வேலை செய்யும் இவரது மகள் ரஞ்சிதா (19) என்பவரை நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கூட்ரோட்டில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது ஜெயின் கோவில் அருகே சென்ற போது பின்னால் சைக்கிளில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் (55) (கூலித் தொழிலாளி) என்பவர் ரஞ்சிதா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். பின்னால் துரத்தி சென்ற ஜீவா ஏன் எனது மகள் மீது மோதிவிட்டு நிற்காமல் செல்கின்றாய் என கேட்டுள்ளார்.

    இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜீவாவை மறைத்து வைத்திருந்த கத்தியால் உலகநாதன் வெட்டியுள்ளார்.

    மேலும் உலகநாதனுக்கு ஆதரவாக அவரது மகன் அஜித்குமார் (19) என்பவர் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் காயமடைந்த ஜீவா வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக ஜீவா வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து உலகநாதனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அஜித்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×